அவன் இவன் திரைப்படத்தின் அவதூறு வழக்கு: இயக்குநர் பாலாவை விடுவித்து உத்தரவு

அவன் இவன் திரைப்படத்தில் சொரி முத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து இயக்குநர் பாலா விடுவிக்கப் பட்டுள்ளார்

Update: 2021-08-19 07:54 GMT
2011ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன்.


இத்திரைப்படத்தில், நெல்லையில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாகக் கூறி கடந்த 2011ல் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.


நடிகர் ஆர்யாவும் தயாரிப்பாளர் கல்பாத்தியும் ஏற்கனவே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை என்று இயக்குனர் பாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, முறையாக குற்றம் நிரூபணம் செய்யப்படாததாகக் கூறி, பாலாவை இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.


பொய் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறி இயக்குநர் பாலா மகிழ்ச்சி தெரிவித்தார்.


இருப்பினும் சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்