நாடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நாடோடிகள் - 2 திரைப்படத்தை இன்று வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2020-01-31 02:04 GMT
நாடோடிகள் - 2 திரைப்படத்தை இன்று வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், படத் தயாரிப்பாளர் நந்தகுமார், தனக்கு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பாக்கி தர வேண்டும் என்பதால் படத்தின் உரிமை தனக்கே சொந்தம் என அறிவிப்பதுடன், படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டதுடன், பட தயாரிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்