ரஜினியின் தர்பார் படத்துக்கு தடை கோரி வழக்கு

நடிகர் ரஜினியின் தர்பார் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

Update: 2019-12-30 11:46 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,  லைகா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 2.0 படத்திற்காக வாங்கிய கடன் லைகா நிறுவனம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கடன் தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்