சர்கார் படத்திற்கு தடை கோரி திடீர் வழக்கு...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் சர்கார் படத்திற்கு, தடை கோரி, சென்னை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2018-10-25 02:29 GMT
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் சர்கார் படத்திற்கு, தடை கோரி, சென்னை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சர்கார் படத்தின் கதை தம்முடையது என கூறி, வருண் என்ற ராஜேந்திரன் என்பவர், மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி, நீதிபதி சுந்தர் முன்னிலையில், மனுதாரர் முறையிட்டதால், 
இன்று விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்