மூளைச்சாவு அடைந்த சிறுவனின் கடைசி ஆசை - ரஜினியை சந்தித்து நிறைவேற்றிய பெற்றோர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் அவினாஷ், தீவிர ரஜினி ரசிகர்.

Update: 2018-09-05 21:28 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் அவினாஷ், தீவிர ரஜினி ரசிகர். தான் வரைந்த ரஜினியின் ஓவியத்தை அவரிடம் காட்டி கையொப்பம் வாங்க அவினாஷ் ஆசைப்பட்டான். ஆனால் ரஜினியை சந்திப்பதற்கு முன் சிறுவன் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டான். இறப்புக்கு முன் அவனது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவனது பெற்றோரை ரஜினி சந்தித்துள்ளார். சிறுவனின் ஆசைப்படி, அவன் வரைந்த ஓவியத்தில் கையொப்பம் வாங்கி சென்றுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்