ஜோதிகாவுக்காக கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

'காற்றின் மொழி' படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Update: 2018-07-29 14:24 GMT
முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு, சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்,  '36 வயதினிலே' படம் மூலம் ரீஎண்ட்ரியான ஜோதிகா, அதன்பிறகு, 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்', ராதா மோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' படங்களில் நடித்து வருகிறார். காற்றின் மொழி படத்தில், அவரது காட்சிகள் முடிந்த நிலையில், ஜோதிகாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர், 'கேக்' வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்