கொரோனா ஊரடங்கு எதிரொலி - மலேசிய சிறையில் உயிரிழந்த தமிழர்

மலேசிய சிறையில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் உடல் சொந்த ஊர் கொண்டு வர முடியாததால் அங்கேயே எரியூட்டப்பட்டது.
கொரோனா ஊரடங்கு எதிரொலி - மலேசிய சிறையில் உயிரிழந்த தமிழர்
x
மலேசிய சிறையில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் உடல் சொந்த ஊர் கொண்டு வர முடியாததால் அங்கேயே எரியூட்டப்பட்டது. காரைக்குடி அருகே உள்ள கீழச்செவல்பட்டியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் மலேசியாவில் உள்ள பினாங்கு முனீஸ்வரர் கோவிலில் பூசாரியாக பணியாற்றியவர். இவர் உரிய விசா இன்றி கூடுதல் காலம் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டின் பேரில் மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லோகநாதன் சிறையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக போக்குவரத்து சேவையும் முடங்கியதால் லோகநாதன் உடலுக்கு அங்கேயே இறுதிச்சடங்கு நடத்தலாம் என உறவினர்கள் முடிவு செய்தனர். பத்துமலை முருகன் கோவிலில் பணியாற்றும் உறவினர் உதவியுடன் லோகநாதனின் உடல் எரியூட்டப்பட்டது. இறந்த பின்னரும் அவரது முகத்தைக் காண முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்