"இலங்கை கலவரம், குண்டு வெடிப்பில் அரசியல் பின்புலம்" - ரனில் விக்கிரமசிங்கே

இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் கலவரத்தின் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரனில் தெரிவித்துள்ளார்
இலங்கை கலவரம், குண்டு வெடிப்பில் அரசியல் பின்புலம் - ரனில் விக்கிரமசிங்கே
x
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற நிலையில், குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் ரனில் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள குளியாப்பிட்டி நகரில் கலவரம் பாதித்த பகுதிகளை அவரும் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், கபீர் காசிம், பைசால் காசிம், அலி சாகிர் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து, குளியாப்பிட்டி காவல் அதிகாரி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ரனில் விக்கிரமசிங்கே,  இந்த சம்பவங்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார். மேலும், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை இலக்காக வைத்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்