இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி
x
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திலக்கிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அளித்த தகவல்படி, லஷ்மி, நாராயண சந்திரசேகர், ரமேஷ் , ரஜினா உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புவில் இருக்கும் இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்களையும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்