தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு : ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா குற்றச்சாட்டு

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு : ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா குற்றச்சாட்டு
x
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் அறிக்கைக்கு இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில் இந்தியா மீது தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஜெய்ஷ் ஸ்ரீ முகமது தீவிரவாத இயக்கத்தின் மூலம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரப், முன்னாள் பாதுகாப்பு துறை ஆலோசகர் துரானி உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்