தேவாலயத்துக்குள் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் - பிரார்த்தனை செய்த 5 பேர் பலி

பிரேசிலின் சாவோ பவுலோ நகர் அருகே உள்ள காம்பினாஸ் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டார்.
தேவாலயத்துக்குள் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் - பிரார்த்தனை செய்த 5 பேர் பலி
x
பிரேசிலின் சாவோ பவுலோ நகர் அருகே உள்ள காம்பினாஸ் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டார். பிரார்த்தனையில் இருந்தவர்களை நோக்கி சுமார் 20 முறை அந்த நபர் சரமாரியாக சுட்டதில், 5 பேர் தேவாலயத்துக்குள்ளேயே உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் வருவதற்குள், அந்த நபரும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர், ஐடிநிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்