இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்
x
* இலங்கை வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. தற்போதைய ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கும் கூட்டம், யாழ்ப்பாணம், நல்லூரில் நடைபெற்றது. 

* தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தனது புதிய கட்சி அறிவிப்பை விக்னேஸ்வரன் வெளியிட்டார். 'தமிழ் மக்கள் கூட்டணி' என்ற புதிய கட்சியை தொடங்கி, தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், ஈபிஆர்எல்எப் கட்சி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் அமைச்சர் ஐங்கர நேசன், சமீபத்தில் புது கட்சி தொடங்கிய ஆனந்தி சசிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்