கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லையை சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழக தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் கனிம வளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்