"நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல்" - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
x
தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், பணி நிரந்தரம், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 மணி நேர போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். உயிரை பணயம் வைத்து கொரோனா காலத்திலும் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்