மின் கட்டணம் கணக்கீட்டு முறை - எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
x
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது மின்சார வாரியத்தின் மின் கணக்கீட்டு முறையை ரத்து செய்ய கோரி, தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வாதத்தை முன் வைத்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசுத்தரப்பு வாதங்களை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே சமயம், தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்