"கொரோனா காலத்திலும் அரசு சுணக்கமின்றி செயல்படுகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
x
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஏல மையமானது 20 கோடியே 20 லட்சத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  கொரோனா போன்ற இக்கட்டான சூழலி​லும் எவ்வித சுணக்கமும் இன்றி அரசு செயல்படுவதாக பெருமிதத்துடன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்