மேட்டூர் அணையில் நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்பொத்தானை அழுத்தி, முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். இதையடுத்து 8 கண் மதகு வழியாக சீறிபாய்ந்த காவிரி நீரில், மலர்கள் தூவி முதலமைச்சர் வழிபட்டார். அணை திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு உரிய காலமாக ஜூன் 12-ல் மேட்டூர் அணையின் 8 கண் மதகு பகுதியில் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலும் 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என டெல்டா விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story