10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
x
தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தொடர்ந்து வழக்கு, உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிப்போடுவது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றனர். எனினும், பொதுத்தேர்வு நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறினர்.  இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்