ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...

ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். "முடி திருத்தும்  நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்" என்றும்..."கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும் என்றும், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் என்றும்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்