"துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம்" - புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எச்சரிக்கை

துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கவில்லை என்றால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம் - புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எச்சரிக்கை
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, அரசு உடனே வழங்கவில்லை என்றால், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கடந்த 4தினங்களாக புதுவை மற்றும் காரைக்கால் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்காமல், அரசு துரோகம் செய்வதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்