தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. சேலத்தில் 5 பேருக்கும், விருதுநகர் மற்றும் திண்டுக்கலில் தலா 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளனது.  தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 23 ஆயிரத்து 303 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும், 106 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்