காருக்கு அடியில் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - தாய் உள்ளத்துடன் கவனித்து கொண்ட பெண் எஸ்.ஐ

ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் 2 மாத ஆண் குழந்தை ஒன்று சாலையில் கைவிடப்பட்ட பரிதாபகரமான சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
காருக்கு அடியில் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - தாய் உள்ளத்துடன் கவனித்து கொண்ட பெண் எஸ்.ஐ
x
சென்னை அடையாறில், குழந்தையின் அழுகுரல் ஒன்று ஊரடங்கு மெளனத்தை கலைத்தது.பத்மநாபன் நகர் ஐந்தாவது குறுக்கு தெருவில் இருந்து வந்தது அந்த அழுகுரல். இடைவிடாமல் அழுத அந்த பிஞ்சுக் குழந்தையின் குரல் வரும் திசை நோக்கி, அங்கிருந்தவர்கள் தேடி பார்த்த போது தெருவின் ஓரம் நின்றிருந்த ஒரு காருக்கு அடியில், பச்சிளங் குழந்தை கிடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்