"அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப். 30-வரை நிறுத்தி வைப்பு" - ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப். 30-வரை நிறுத்தி வைப்பு -  ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு
x
சென்னை உயர்நீதிமன்றம்,  மதுரை கிளை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை  ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி முக்கியத்துவம் வாய்ந்த, அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்