"யாரும் என்னை கடத்தவில்லை"- சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி

மேட்டூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு பவானி காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார்.
யாரும் என்னை கடத்தவில்லை- சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி
x
மேட்டூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு, பவானி காவல் நிலையத்தில், இளமதி ஆஜரானார். அங்கிருந்து நீதிமன்றம் அழைத்துச் சென்ற நிலையில், தம்மை யாரும் கடத்தவில்லை என்றும், தாமாக சென்று, தானே திரும்பி விட்டதாக இளமதி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, இளமதியை அரசு காப்பகத்தில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ஈரோடு அரசு காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். 


Next Story

மேலும் செய்திகள்