அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
x
அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை  வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது, தந்தையுடன் வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதை கண்டறிந்தனர். இது  கொரோனா வைரஸ் அறிகுறியாக  இருக்கலாம் என்பதால் விமான நிலைய மருத்துவ குழுவினர் தந்தையுடன் சிறுவனை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்