தங்கைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சகோதரன் - தாய், தந்தை பிரிந்ததால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னையில் தன் உடன் பிறந்த தங்கையை கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்த சிறுவனை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சகோதரன் - தாய், தந்தை பிரிந்ததால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
x
சென்னையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடால் கணவன், மனைவி இருவரும் பிரிந்த நிலையில், வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட தாய்,  பிள்ளைகளை தன் உடனே வளர்த்து வந்தார். தாய் வேலைக்கு சென்ற நிலையில் தங்கை மட்டும் வீட்டில் இருந்ததை பார்த்துள்ளார் அந்த சிறுவன். இதையடுத்து தங்கையை அழைத்துச் சென்ற அவர், கை, கால்களை கட்டி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன் சொந்த தங்கை என்றும் பாராமல் பலமுறை பலவந்தமாக பாலியல் வன்முறை செய்த தன் சகோதரனை பற்றி போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த சிறுமி. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் அதர்ச்சி ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்