மார்ச் 31 க்குள் பான்கார்டுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு - வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

ஆதார் எண் இணைக்காத பான் கார்டுகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
மார்ச் 31 க்குள் பான்கார்டுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு - வருமான வரித்துறை புதிய அறிவிப்பு
x
ஆதார் எண் இணைக்காத பான் கார்டுகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. 
மார்ச் 31 ஆம், தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என  வருமான வரித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், செயல்படாத பான் கார்டு என அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், செயல்படாத பான் கார்டுகளை பயன்படுத்த 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும், வரி அல்லாத நோக்கங்களுக்காக பான் கார்டை பயன்படுத்த அபராதம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்