2016 குரூப் 4 தேர்வில் முறைகேடு - மேலும் 4 பேர் முறைகேடு - சிபிசிஐடி தகவல்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மேலும் 4 பேர் முறைகேடு செய்து பணியில் சேர்ந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
2016 குரூப் 4 தேர்வில் முறைகேடு - மேலும் 4 பேர் முறைகேடு - சிபிசிஐடி தகவல்
x
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மேலும் 4 பேர் முறைகேடு செய்து பணியில் சேர்ந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சக்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்வில், மேலும் 4 பேர் முறைகேடு செய்து, தற்போது அதிகாரிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்