பணிக்கு சென்று மாயமான சிஆர்பிஎப் வீரர் : கணவனை கண்டுபிடித்து தரகோரி மனைவி வழக்கு
சண்டிகரில், சி.ஆர்.பி.எப்.யில் பணிபுரியும், கணவனை கண்டுபிடித்து தர கோரி, தெய்வகனி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சண்டிகரில், சி.ஆர்.பி.எப்.யில் பணிபுரியும், கணவனை கண்டுபிடித்து தர கோரி, தெய்வகனி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சி.ஆர்.பி.எப்யில் பணியாற்றி வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் விடுமுறை முடிந்து, கடந்தாண்டு ஜூன் 29 ஆம் தேதி, பணிக்கு திரும்பிய நிலையில், ஜூலை 1 ஆம் தேதி தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேசியுள்ளார். இதையடுத்து, ஜூலை 2 ஆம் டெல்லியில் இருந்து, தெய்வகனியை தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், தங்கள் கணவரது பொருள்கள் வந்துள்ளது, ஆனால் அவர் வரவில்லை என தகவல் கூறியுள்ளர். எனவே, தனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிடுமாறு தெய்வகனி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Next Story