டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம்: "அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு " - தயாநிதி மாறன் கருத்து

சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார்
டி.என்.பி.எஸ்.சி.  குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு  - தயாநிதி மாறன் கருத்து
x
சென்னை பெரியமேடு  ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி.  தயாநிதி மாறன் இன்று  திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், நாட்டை உலுக்கிய வியாபம் ஊழலை போன்று, டி.என்.பி.எஸ்.சி.  குரூப் 4 தேர்வில் முறைகேடு பெரிய அளவில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார். இதில் அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டு உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்