ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முப்பத்தி ஏழு, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 103, விழுப்புரத்திற்கு 25, சேலத்திற்கு 10, கோவைக்கு 20, கும்பகோணத்திற்கு 35, மதுரை, நெல்லைக்கு தலா 5 என மொத்தம் 240 பேருந்துகளும் ஒப்படைக்கப்பட்டன. 10 லட்சம் மதிப்பில் இரண்டு  அம்மா அரசு  நடமாடும் பணிமனைகள் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்