பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்
x
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். தைத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி தற்போது பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் செல்ல தொடங்கியுள்ளனர். விபத்துக்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்