"ஆளும் கட்சியினர் மிரட்டல்" : சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.
ஆளும் கட்சியினர் மிரட்டல் : சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
x
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இப்பகுதியில், தங்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக, சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவார்கள் என்று கருதி, தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ய முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மக்களுக்கு நேரடியாக தெரியும் வண்ணம், வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்