"பிறந்து மூன்றே நாள் : பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை" - அரசு மருத்துவர்குழு சாதனை

சேலத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன, பச்சிளம் குழந்தைக்கு சவாலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
x
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த  மணிவண்ணன் மனைவி நிர்மலாவிற்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பிறவியிலேயே உணவுப்பாதை, தொண்டைக்கு கீழே உற்பத்தியாகாமல் இருந்ததை கண்டறிந்தனர். மேலும், உணவுக்குழாய் இரைப்பைக்கு செல்லாமல் மூச்சுக்குழாய் உடன் இணைந்து இருந்ததும் தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைக்கு, பிறந்த மூன்றாவது நாளிலேயே சவாலான அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர். 

குழந்தையின் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு : அறுவை சிகிச்சை இன்றி அடைப்பு நீக்கம்

இதே மருத்துவமனையில், சிறு குழந்தையின் சிறுநீர்ப்பாதையில் இருந்த அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி, மருத்துவர்கள் சரி செய்தனர். 
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வினோதினிக்கு,  பிறந்த ஆண் குழந்தை மூச்சுத் திணறல் உடன் வயிறு வீங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு எந்த ஒரு திறந்த அறுவை சிகிச்சையும் செய்யாமலேயே இரண்டு மில்லி மீட்டர் அளவான சிறு உள்நோக்கியை சிறுநீர் பாதையில், செலுத்தி சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருந்த அடைப்பினை நீக்கி, அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இரு பச்சிளம் குழந்தைகளுக்கு சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த மருத்துவர்களை அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்