திண்டிவனத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் அடுத்த மேல் பாக்கத்தில் அமைந்துள்ள கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இரண்டாவது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் அடுத்த மேல் பாக்கத்தில் அமைந்துள்ள கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இரண்டாவது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசையும், அந்த மசோதாவிற்கு ஆதரவளித்த அதிமுக அரசையும் கண்டித்து மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நீண்ட நேரத்திற்க்கு பிறகு மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.
Next Story