சோ.தர்மனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சோ. தர்மனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிராமிய நடையில் படைப்புகள் உருவாக்கி, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சோ.தர்மன் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விளம்பர வெளிச்சம் அவ்வளவாக இல்லாத அந்தப் படைப்பாளி, இந்த பரிசின் மூலமாக உற்சாகம் அடைவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story