குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டம்
x
சென்னை 

சென்னையில் லயோலா கல்லூரியில் மாணவர்கள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர்,  குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

திருவாரூர்

இதேபோல், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர் சங்கத்தினரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர், கல்லூரி வாயிலில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

புதுச்சேரி 

இதேபோல்,  டெல்லி வன்முறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.



Next Story

மேலும் செய்திகள்