மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை

மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறுகிறது
மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை
x
துணை மேயர், துணை தலைவர் பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழகம் முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அதில் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்