"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வெப்பச் சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இந்த தகவலை வெளியிட்டார். சென்னையை பொருத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும், அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்