பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : "அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்" - ஸ்டாலின்

கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
x
கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அந்தப் பெண்ணுக்கு, 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்த ஸ்டாலின், அவருக்கு செயற்கை கால் பொறுத்தும் முழு செலவையும் திமுக ஏற்கும் என்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சுபஸ்ரீ, ராஜேஸ்வரி ஆகியோருக்கு நேர்ந்த விபத்துகளுக்கு அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்