7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித நேயம் போற்றத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்த பிறகும் அதனை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால் அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித நேயம் போற்றத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுட்டுள்ள அவர், கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பாஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சரே பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இன உணர்வு என்றால் என்ன என்பதை பஞ்சாப் காங்கிரசிடம்  தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்