ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு

ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை, இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் : உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களை மாற்றம் செய்ய உத்தரவு
x
இதன்படி, ஒரே மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல்  பணியாற்றக்கூடிய அலுவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பட்டியலையும் நீண்டகாலமாக ஒரே மாவட்டத்தில பணியாற்ற கூடியவர்களின் பட்டியலையும் தயார் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட கூடியவர்களை மாற்றம் செய்து, அதற்கான பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சொந்த ஊர் மற்றும் 3 வருடத்திற்கு  தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தயாரித்து இடமாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை வரும் 15-ஆம் தேதிக்குள்  அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பவும்  அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்