பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த பெண்கள் உள்ளிட்ட 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
x
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த பெண்கள் உள்ளிட்ட  51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோவை மாவட்டம், கவுண்டர்மில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட  51 பேர் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து சிலர் குளித்து மகிழ்ந்தும், நடுத்திட்டில் சமையல் செய்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். மாலையில் பில்லூர் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறினர். பின்னர் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்