தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பவாரியா கும்பல்? : 120 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்

சென்னை நங்கநல்லூரில் 120 சவரன் நகை கொள்ளையடித்தது, பவாரியா கொள்ளைக் கும்பலின் ஒரு பிரிவான பாஹ்ரியா என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
x
சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த ரமேஷ், கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்றிருந்த நிலையில், மனைவியும், குழந்தைகளும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், 10 சவரன் வைர நகைகள், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மும்பையில், 6 பேர் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் சிக்கியுள்ளது. மேலும், இந்த கும்பல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பவாரியா கும்பல் என்று தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, கும்பலை அழைத்து வர தமிழக போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்