துபாய் சென்றார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
துபாய் சென்றார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என 3 நாடுகள் பயணமாக கடந்த 28ஆம் தேதியன்று முதலமைச்சர் பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். முதலில் இங்கிலாந்து பயணத்தை முடித்த அவர், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, நியுயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள கழிவு நீரை மறு சுழற்சியாக்கும் நிறுவனத்தை பார்வையிட்டார். வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்தமாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறையை, அவருக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.  இதையடுத்து, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து துபாய் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று துபாயில் உள்ள தொழிலதிபர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். 
இரண்டு வார கால வெளிநாடு சுற்றுப் பயணத்துக்கு பிறகு, 10ஆம் தேதி அதிகாலை 2.40 மணி அளவில் சென்னைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்புகிறார்.

Next Story

மேலும் செய்திகள்