இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் : பேருந்தை கடக்க முயன்ற போது விபத்து

திருச்செங்கோடு அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், பேருந்தை கடக்க முயன்ற போது மற்றோரு வாகனம் மீது மோதி உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் : பேருந்தை கடக்க முயன்ற போது விபத்து
x
திருச்செங்கோடு அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், பேருந்தை கடக்க முயன்ற போது மற்றோரு வாகனம் மீது மோதி உயிரிழந்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த சந்த்ரு என்பவர், திருச்செங்கோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும்போது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது திருச்செங்கோடு-சேலம் சாலையில் முன்பு சென்ற தனியார் பேருந்தை கடக்க முயன்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியதில், நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் சந்த்ரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்