மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில், ரயிலை கவிழ்க்கும் சதி இல்லை என ரயில்வே ஐஜி வனிதா கூறியுள்ளார்.
x
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில்,  ரயிலை கவிழ்க்கும் சதி இல்லை என ரயில்வே ஐஜி வனிதா கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று கோணங்களில் தீவிர விசாரணை நடத்திய நிலையில், தண்டவாளத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க வரும் குடிகாரர்களின் கைவரிசை என்பது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  கொள்ளையர்களை பிடிக்க, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளதாக ரெயில்வே ஐஜி - வனிதா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்