வெளிநாடு புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி

இன்று வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
x
இன்று வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அவரை அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வழியனுப்பினர்.


இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய 3 நாடுகளில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மொத்தம் 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டனுக்கு புறப்பட்டார். செப்டம்பர் 1ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்நாட்டில் உள்ள மருத்துவத்துறை குறித்தும், காற்றாலை, சூரிய மின்சக்தி குறித்தும் கேட்டறிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி 2ஆம் தேதி, நியூயார்க் செல்ல உள்ளார்.


அமெரிக்காவின் கலிபோர்னியா கால்நடை பண்ணைக்கு சென்று,  சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவிற்கு தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து, அவர் கேட்டறிகிறார். மேலும் அங்குள்ள தமிழ் வாழ் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில், செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய 3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டு, செப்டம்பர் 10 -ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை திரும்புகிறார். வெளிநாடு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வழியனுப்ப அவரின் வீடு அமைந்துள்ள சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் இருந்து விமான வரை வழிநெடுகிலும் அ.தி.மு.க.-வினர் திரண்டிருந்தனர். மேளதாளம் முழங்க அவர்கள் உற்சாகத்தில் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்