மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.
x
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது. குழந்தைகள் விளையாடும் பகுதியில் இருந்த பைக்குள் மர்ம பொருள் வைக்கப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்ததில் ஜெயராம்,  திலிபன், யுவராஜ், சூரியா, திருமால், விஸ்வநாதன் ஆகிய 6 இளைஞர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனே, அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். 

இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளவர்களை நேரில் சென்று பார்த்தார். மேலும், மர்ம பொருள் வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்