7 தலைமுறை உறவுகளை இணைக்கும் விழா - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ராசிபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 தலைமுறையை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
7 தலைமுறை உறவுகளை இணைக்கும் விழா - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் முத்துநல்லியப்பன். காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரியான இவர்  தன்னுடைய மூதாதையர்கள் குறித்து அறிந்துகொள்ள அறக்கட்டளை உருவாக்கி 1824ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான அனைத்து உறவினர்களையும் கண்டறிந்த அவர், இவர்களை இணைக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி இவரது குடும்பத்தை சேர்ந்த ஏழு தலைமுறைகளை சேர்ந்த உறவினர்களை ஒன்றிணைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உறவுகள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். நூற்றாண்டு கடந்த உறவுகள், அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றாக கூடிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்